160x600_1 IFRAME SYNC

வியாழன், 14 பிப்ரவரி, 2019

காளான் பொரியல்

வணக்கம்.
காளான் பொரியல்:
தேவையான பொருட்கள்
காளான்-250கிராம்.
மஞ்சள் பொடி- சிறிதளவு
பெரிய வெங்காயம்-100கிராம்.
எண்நெய் -தேவையான அளவு .
தேங்காய் துருவல்-3தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-4
கடுகு-தேவையான அளவு.
கறிவேப்பிலை-சிறிதளவு.
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
காளான்,பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்நெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து காளானைவதக்கவும்.மஞ்சள் தூள் ,தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வெந்ததும் இறக்கவும்.சுவையான காளான் பொரியல் தயார்.
                                       நன்றி.

வியாழன், 1 நவம்பர், 2018

பேரீச்சம்பழ துக்கடா

வணக்கம்.
பேரீச்சம்பழ துக்டா:
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம்--150கிராம்(கொட்டை நீக்கியது)
சர்க்கரை--150கிராம்.
மைதா--250கிராம்.
எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
மைதாமாவையும், சர்க்கரையையும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.இதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் ஒரு பேரீச்சம்பழத்தை வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.சுவையான பேரீச்சம்பழ துக்கடா தயார் .
                  நன்றி.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

கடலை மாவு பர்பி

வணக்கம்.
கடலை மாவு பர்பி
தேவையான பொருட்கள் :
கடலை மாவு --1  1/2டம்ளர் (ஒன்றை டம்ளர்)
பால் --1 1/2டம்ளர் (ஒன்றை டம்ளர்)
சர்க்கரை---3டம்ளர் (மூன்று டம்ளர்)
நெய்--4தேக்கரண்டி
செய்முறை:
கடலை மாவில் நெய் விட்டு உதிரியாக பிசைந்து வைக்கவும்.வாணலியில் பால் ஊற்றி அத்துடன் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.பால் கொதித்ததும் பிசைந்து வைத்துள்ள கடலை மாவை அதில் போட்டு அடிபிடிக்காமல் கிளரவும் .கலவை நன்றாக பொங்கி  நுரைத்து வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் பரப்பி விடவும்.கத்தியால் சிறிய வில்லைகளாக போடவும்.சுவையான கடலை மாவு பர்பி தயார் .
                                                                   நன்றி.

பாசிப்பருப்பு அல்வா

வணக்கம்.
பாசிப்பருப்பு அல்வா
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு --1/4கிலோ
சர்க்கரை--1/4கிலோ
நெய்--300மி.லி
ஏலக்காய்--5
முந்திரி பருப்பு --25கிராம்
பஜ்ஜி பவுடர் --சிறிதளவு
செய்முறை:
பாசிப்பருப்பை 1/2மணி நேரம் ஊற வைத்து அரைத்து ,வாணலியில் நெய் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு கலவையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளரவும்.கிளரி  வரும் போது சிறிதளவு பஜ்ஜி பவுடர் சேர்க்கவும்.அல்வா பதம் வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி  வறுத்த முந்திரி பருப்பு வைத்து அலங்கரிக்கவும்.சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
                                 நன்றி.

வியாழன், 11 அக்டோபர், 2018

மைதா ஸ்வீட் கேக்

வணக்கம்.
மைதா ஸ்வீட் கேக்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு --1/2கிலோ
சர்க்கரை--600கிராம்
டால்டா--400கிராம்
ஏலக்காய்--6
உப்பு சிறிதளவு
செய்முறை:
மைதா மாவை  சிறிதளவு உப்பு சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும். 1டம்ளர் அளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை பாகு காய்ச்சவும்.பாகு கம்பி பதத்தில் வருவதற்கு முன்பே மைதாமாவை போட்டு அதனுடன் டால்டாவையும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளக்கொண்டே வரவும்.எல்லாம் நன்றாக சுருண்டு வரும் போது ஏலக்காயை பொடி செய்து பாேடவும்.ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பி  விடவும்.கத்தியால் வில்லைகளாகப் போடவும்.மைதா ஸ்வீட் கேக் சாப்பிட சுவையாக இருக்கும்.
                                                  நன்றி

சோளக்கதிர் அல்வா

வணக்கம்.
சோளக்கதிர் அல்வா
தேவையான பொருட்கள்:
உதிர்த்த  சோளக்கதிர் மணிகள்--1டம்ளர்
சர்க்கரை--3/4 டம்ளர்
முந்திரி பருப்பு--10
நெய்--தேவயான அளவு
ஏலக்காய்-5
செய்முறை:
உதிர்த்த சோளக்கதிர் மணிகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, முந்திரி பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளரவும்.சிறிது கெட்டியான பிறகு ஏலக்காய், நெய் சேர்த்து இரக்கவும்.சுவையான சோளக்கதிர் அல்வா ரெடி.
               நன்றி.


உருளைக்கிழங்கு வடை

வணக்கம்.
உருளைக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு-4
பொரிகடலை மாவு -1/4கப்
அரிசி மாவு --1௧ப்
தக்காளி--4
எண்ணெய் தயாரிக்க தேவையான அளவு
பெருங்காயம் --சிறிதளவு
இஞ்சி -சிறிய துண்டு
பச்சை மிளகாய்-- 6
தேங்காய் துருவல் --1கப்
கறிவேப்பிலை ,கொத்தமல்லி --தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி,பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து துருவி வைத்துக்கொள்ளவும். தக்காளியை சுடு தண்ணீரில் விட்டு தோல் உரிக்கவும் ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழஙகு,தக்காளி,அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய்,இஞ்சி,தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கறிவேப்பிலை,கொத்து மல்லி தளை போட்டு,பெருங்காயம் சேர்த்து வடையாக  தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு வடை தயார்.