160x600_1 IFRAME SYNC

செவ்வாய், 30 ஜூலை, 2019

செவன்கப் கேக்.

தேவையான பொருட்கள்:
1.கடலைமாவு-1கப்.
2. காய்ச்சிய பால்-2கப்.
3.நெய்-1கப்.
4.சர்க்கரை-3கப்.
செய்முறை:
1.வாணலியில் நெய்யை ஊற்றி கடலைமாவையும் அதில் போட்டு,நெய்யும் ,கடலைமாவும் சேர்ந்து பூரித்துக் கொண்டு வரும் சமயம் பால்,சர்க்கரை இரண்டையும் கொட்டி கிளரிக் கொண்டிருக்க வேண்டும்.பந்து போல சுருண்டு வரும் வரை கிளரவும்.
2.ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் வாணலியில் உள்ள கலவையை பரவலாக ஊற்றி, சூடு ஆறிய பின்பு கேக் வடிவத்தில் வில்லைகளாக போடவும்.சுவையான செவன்கப் கேக் தயார்.
நன்றி.

திங்கள், 29 ஜூலை, 2019

கேரட் தோசை.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி 200கிராம்.
புழுங்கல் அரிசி 200கிராம்.
கேரட் 1/2 கிலோ.
வரமிளகாய  20.
தேங்காய் 1/2 மூடி.
உப்ப, பெருங்காயம்,கறிவேப்பிலைதேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் கலந்து ஊறவைக்கவும்.துருவிய தேங்காய்மற்றும்கேரட்டை துருவி போட்டு ஆட்டவும்.அதனுடன் பெருங்காயம்,கறிவேப்பிலை,தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக ஆட்டி தோசையாக சுட்டு எடுக்கவும்.

பருப்பு உருண்டைக் குழம்பு.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு 200கிராம்.
மிளகாய் வற்றல்--3
சின்ன வெங்காயம் 100கிராம்.
கறிவேப்பிலை 1கொத்து.
உப்பு தேவையான அளவு.
மல்லிப் பொடி 3 மேஜைக் கரண்டி..
மிளகாய் பொடி 2 ஸ்பூன்.தக்காளி2 புளி எலுமிச்சையளவு.

அரைப்பதற்கு:

மிளகு5 கிராம்
சீரகம்5கிராம்
தேங்காய்1/2மூடி
சோம்பு 5கிராம்

செய்முறை:   பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் மிளகாய் வற்றல்  சிறிது சோம்பு  சேர்த்து அரைத்து  உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம்      தக்காளி கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

மல்லிப்பொடி மிளகாய் பொடி புளி சிறிதளவு கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

 பிறகு பருப்பு உருண்டைபோட்டு மிதமான சூட்டில் 10நிமிடம் வைக்கவும். அதன்பிறகு  தேங்காய் 

அரைத்ததை ஊற்றி கொதிக்க விட்டு  இறக்கினால் சுவையான பருண்டை குழம்பு தயார்.