160x600_1 IFRAME SYNC

திங்கள், 29 ஜூலை, 2024

கொண்டைக்கடலை மீல்மேக்கர் கூட்டு

 தேவையான பொருள்கள்

1. வெள்ளை கொண்டைக்கடலை_1/2 கப்.

2. மீல் மேக்கர் - 2 கப்.

3. மிளகு - 1/2 ஸ்பூன்.

4. சீரகம் - 1 ஸ்பூன்.

5. மிளகாய் வற்றல் - 5 எண்ணிக்கை

6. சின்ன வெங்காயம் - 100 கிராம்.

7. சோம்பு - 1/2 ஸ்பூன்.

8. எண்ணெய் - 1/2 ஸ்பூன்

9. வெள்ளை எள் - 2 ஸ்பூன்.

10. உப்பு தேவையான அளவு.11. கொத்தமல்லி, கறிவேப்பிலை.

செய்முறை:

வெள்ளை கொண்டைக்கடலை யை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

         வெள்ளை எள்ளை மிதமான சூட்டில் வறுக்கவும்.

மிளகு, சீரகம் ஒன்றாக சேர்த்துப் பொடியாக்கவும்.

          மீல் மேக்கரை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிட்டுப் பிழிந்து மிக்ஸியில் போட்டு மூன்று முறை சுற்றினால் உதிரியாக வரும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு சோம்பு போட்டு வெடித்ததும் 100 கிராம் சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த பொடியையும் வெள்ளை கொண்டக்கடலையையும் சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு சேர்த்து அதனுடன் உதிரியாக உள்ள மீல் மேக்கரையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். கடைசியாக வறுத்த வெள்ளை எள்ளு தூவி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். சாப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


வெள்ளி, 22 அக்டோபர், 2021

காளான் குருமா

 


தேவையான பொருட்கள்
1. காளான் - 250 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
2. பச்சை பட்டாணி - 100 கிராம்.
3.தக்காளி - 150 கிராம்.
4. பெரிய வெங்காயம்-50 கிராம்.
6. தேங்காய் - 1 மூடி.
7. சோம்பு - 1/2 கரண்டி.
8. வெள்ளை பூண்டு - 2
9. கசகசா - 1 கரண்டி.
10. இஞ்சி - சிறிய துண்டு.
11. கிராம்பு- 3
12. பட்டை - சிறியது
13. பச்சைமிளகாய் - 20 இராம்
14. தேவையான அளவு எண்ணெய்.
15. பொட்டுக்கடலை - 1 கரண்டி.
16. தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு துருவிய தேங்காய், சோம்பு, கசகசா, வெள்ளை பூண்டு, இஞ்சி, கிராம்பு சேர்த்து வறுத்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி, காளான், பட்டை ஆகியவற்றை கொட்டி வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். சுவையான காளான் குருமா தயார். சப்பாத்திக்கு சாப்பிட சுவையாக இருக்கும்.


திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சில்லி மட்டன் மசாலா.

தேவையானபொருட்கள்:

மட்டன்-1/2 கிலோ.
பச்சை மிளகாய்-10.
சீரகம்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-1கப்.
எண்ணெய்-100 மி.லி.
மிளகாய் தூள்- 2தேக்கரண்டி..
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
புளித்தண்ணீர்-2கப்.
கறிமசாலா-1தேக்கரண்டி.
சோம்பு அரைத்த விழுது-1தேக்கரண்டி.
கசகசா-1தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு விழுது-1மேஜைக்கரண்டி.
வெங்காயம்-2.
தக்காளி-2.
எள்-1தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
அரைத்த சோம்பு விழுதுடன் உப்பு சேர்த்து,அதில் மட்டனை 30 நிமிடம் ஊறவைக்கவும்.குக்கரில் 5டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து சீரகம்,தக்காளி,வெங்காயத்தைப் போட்டு பொரிந்தவுடன  மசாலா சேர்த்த மட்டனை போடவும்.எண்ணெய் தனியாக பிரிந்து வரும்வரை வறுக்கவும்.2கப் சூடான தண்ணீர் சேர்க்கவும்.15 நிமிடத்திற்கு கறியை வேகவைக்கவும்.வாணலியில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து கீறிய மிளகாயை வதக்கவும்.கறியில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சுடுசாதத்துடன் சாப்பிட சுவையான சில்லி மட்டன் மசாலா தயார்.
          நன்றி.

சனி, 17 ஆகஸ்ட், 2019

வத்தக் குழம்பு.

தேவையான பொருட்கள்:

மாங்காய் வத்தல்-100கிராம்.
அவரை வத்தல்-100கிராம்.
கத்தரி வத்தல்-100கிராம்.
பூண்டு-2
வெங்காயம்-100கிராம்.
மிளகாய்பொடி-5ஸ்பூன்.
புளி-சிறிதளவு.
தக்காளி-1.
கடுகு, உழுந்தம்பருப்பு,சோம்பு-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

வத்தல்களை தண்ணீர் விட்டு ஊறவைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பூண்டு உரித்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி உழுந்தம்பருப்பு,கடுகு,சோம்பு போட்டு தாளித்து அதில் வெங்காயம்,பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.புளியை கரைத்து ஊற்றி மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, வற்றலை சேர்த்து வெந்தவுடன் இறக்கவும்.சுவையான வத்த குழம்பு தயார்.

           நன்றி.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

ரவா லட்டு.

தேவையான பொருட்கள்.

ரவை-1கப்.
சீனி-1கப்.
வறுத்த முந்திரிப் பருப்பு-20கிராம்.
தேங்காய்த் துறுவல்-1டேபிள் ஸ்பூன்.
நெய்-தேவையானஅளவு.

செய்முறை:

வாணலியில் 1ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும்.தேங்காயை வெறும் வாணலியில் வதக்கவும்.ரவையையும்,சீனியையும்ஒன்றாகப்போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.நன்றாக பொடியானதும் தேங்காயைப் போட்டு அரைக்கவும்.இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.நெய்யை சூடுபண்ணி அதில் முந்திரிப் பருப்பை வறுக்கவும். மாவில் நெய்யை சூடுபண்ணி ஊற்றி கிளரவும்.இதை சூடுபொறுக்கும் அளவு வந்தவுடன் லட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான ரவா லட்டு தயார்.

       நன்றி.


புதன், 14 ஆகஸ்ட், 2019

வெள்ளை மொச்சை உப்புமா.

தேவையான பொருட்கள்:
வெள்ளை மொச்சை--1/4கிலோ.
தேங்காய் துறுவல்- தேவையான அளவு.
பச்சை மிளகாய்-5.
வர மிளகாய்-2.
இஞ்சி-சிறிதளவு.
கறிவேப்பிலை-சிறிதளவு.
சின்ன வெங்காயம்-100கிராம்.
கொத்யமல்லிஇலை-சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
தாளிக்க- கடுகு, உழுந்து -சிறிதளவு.
பெரிய வெங்காயம்-1
எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளை மொச்சையை 4 மணி நேரம் ஊறவைத்து காயவைக்கவும். மொச்சை காய்ந்ததும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். மொச்சயை மிக்ஸில் மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.இஞ்சி ,கறிவேப்பிலை போட்டு பொரிக்கவும்.வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உழுந்தம்பருப்பு ,சின்ன வெங்காயம் வர மிளகாய் போட்டு தாளித்து தண்ணீர் ஊற்றவும்.நன்கு கொதித்ததும் அதில் மொச்சை மாவைத் தூவவும்.பெரிய வெங்காயம், தேங்காய் துறுவல்,கொத்தமல்லி இலை இஞ்சி போட்டு இறக்கவும் சுவையான வெள்ளை மொச்சை உப்புமா தயார்.

            நன்றி.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

வெள்ளரிக்காய் பஜ்ஜி.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் வட்டமாக வெட்டியது - தேவையான அளவு.
கடலைமாவு--4 கப் அளவு.
அரிசிமாவு-1கப் அளவு.
மிளகாய்தூள்-தேவையான அளவு.
கரம் மசாலா- தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

கடலைமாவுடன் அரிசிமாவு,கரம்மசாலா,மிளகாய்தூள்,தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்துதேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்
 தயாரான பஜ்ஜி மாவில்  வட்டமாக வெட்டிய வெள்ளரிக்காய் துண்டுகளை அதில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான வெள்ளரிக்காய் பஜ்ஜி தயார்.

    நன்றி 

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

தந்தூரி கோபி.

தேவையான பொருட்கள்:
காலிபிளவர்_750 கிராம்,     தயிர்_100கிராம்,வறுத்த நிலக்கடலை பவுடர்_2மேஜைகரண்டி,மிளகாய்த்தூள்_2மேஜைகரண்டி,இஞ்சி,பூண்டு விழுது_2மேஜைகரண்டி,எலுமிச்சை சாறு_2தேக்கரண்டி,கரம்மசாலா பவுடர்_1/2தேக்கரண்டி,உப்பு,மற்றும் எண்ணெய்_தேவையான அளவு.
செய்முறை:காலிபிளவரை நன்றாக கழுவிக்கொள்ளவும்.உப்பு,மஞ்சள்த்தூள் சேர்த்து வேகவைக்கவும்.பாதி வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். மேலே கொடுக்கப்பட்ட மசாலாப்பொருட்களை வேகவைத்த காலிபிளவருடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் மசாலா கலந்த காலிபிளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்பொழுது சுவையான  தந்தூரி கோபி தயார்

சனி, 3 ஆகஸ்ட், 2019

சிக்கன் ரோஸ்ட்.

தேவையான பொருட்கள்:

 கோழி-1கிலோ.
பச்சைமிளகாய்-10.
பெரியவெங்காயம்-4
தக்காளி-6
புதினா-சிறிதளவு.
கறிவேப்பிலை-தேவையான அளவு.
மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி-4 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய்-100 மி.லி.
நெய்-50 கிராம்.             தண்ணீர்-2கப்.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
1.கோழியை சுத்தப்படுத்தி துண்டு துண்டாக நறுக்கவும்.                                    2.பெரியவெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
3.தக்காளியை வெட்டி வைக்கவும்.
4. புதினா இலையை நறுக்கிவைக்கவும்.
5. வாணலியில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் பெரியவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,புதினா ஆகியவைகளைப் போட்டு தாளிக்கவும்.
6.அந்த தாளிப்பில் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ஆகியவைகளைச் சேர்த்து நன்றாக கிளரிவிட்டுக்கொண்டு 2கப் தண்ணீர் ஊற்றவும்.
7.தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதில் கோழி இறைச்சி துண்டுகளைப் போட்டு உப்பு சேர்த்து மூடிவைக்கவும்.அவை நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
8. சிறிதளவு நெய்யில் பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வறுத்து சிக்கன்ரோஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்

செவ்வாய், 30 ஜூலை, 2019

செவன்கப் கேக்.

தேவையான பொருட்கள்:
1.கடலைமாவு-1கப்.
2. காய்ச்சிய பால்-2கப்.
3.நெய்-1கப்.
4.சர்க்கரை-3கப்.
செய்முறை:
1.வாணலியில் நெய்யை ஊற்றி கடலைமாவையும் அதில் போட்டு,நெய்யும் ,கடலைமாவும் சேர்ந்து பூரித்துக் கொண்டு வரும் சமயம் பால்,சர்க்கரை இரண்டையும் கொட்டி கிளரிக் கொண்டிருக்க வேண்டும்.பந்து போல சுருண்டு வரும் வரை கிளரவும்.
2.ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் வாணலியில் உள்ள கலவையை பரவலாக ஊற்றி, சூடு ஆறிய பின்பு கேக் வடிவத்தில் வில்லைகளாக போடவும்.சுவையான செவன்கப் கேக் தயார்.
நன்றி.

திங்கள், 29 ஜூலை, 2019

கேரட் தோசை.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி 200கிராம்.
புழுங்கல் அரிசி 200கிராம்.
கேரட் 1/2 கிலோ.
வரமிளகாய  20.
தேங்காய் 1/2 மூடி.
உப்ப, பெருங்காயம்,கறிவேப்பிலைதேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் கலந்து ஊறவைக்கவும்.துருவிய தேங்காய்மற்றும்கேரட்டை துருவி போட்டு ஆட்டவும்.அதனுடன் பெருங்காயம்,கறிவேப்பிலை,தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக ஆட்டி தோசையாக சுட்டு எடுக்கவும்.

பருப்பு உருண்டைக் குழம்பு.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு 200கிராம்.
மிளகாய் வற்றல்--3
சின்ன வெங்காயம் 100கிராம்.
கறிவேப்பிலை 1கொத்து.
உப்பு தேவையான அளவு.
மல்லிப் பொடி 3 மேஜைக் கரண்டி..
மிளகாய் பொடி 2 ஸ்பூன்.தக்காளி2 புளி எலுமிச்சையளவு.

அரைப்பதற்கு:

மிளகு5 கிராம்
சீரகம்5கிராம்
தேங்காய்1/2மூடி
சோம்பு 5கிராம்

செய்முறை:   பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் மிளகாய் வற்றல்  சிறிது சோம்பு  சேர்த்து அரைத்து  உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம்      தக்காளி கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

மல்லிப்பொடி மிளகாய் பொடி புளி சிறிதளவு கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

 பிறகு பருப்பு உருண்டைபோட்டு மிதமான சூட்டில் 10நிமிடம் வைக்கவும். அதன்பிறகு  தேங்காய் 

அரைத்ததை ஊற்றி கொதிக்க விட்டு  இறக்கினால் சுவையான பருண்டை குழம்பு தயார்.


வியாழன், 14 பிப்ரவரி, 2019

காளான் பொரியல்

வணக்கம்.
காளான் பொரியல்:
தேவையான பொருட்கள்
காளான்-250கிராம்.
மஞ்சள் பொடி- சிறிதளவு
பெரிய வெங்காயம்-100கிராம்.
எண்நெய் -தேவையான அளவு .
தேங்காய் துருவல்-3தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-4
கடுகு-தேவையான அளவு.
கறிவேப்பிலை-சிறிதளவு.
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
காளான்,பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்நெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து காளானைவதக்கவும்.மஞ்சள் தூள் ,தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வெந்ததும் இறக்கவும்.சுவையான காளான் பொரியல் தயார்.
                                       நன்றி.

வியாழன், 1 நவம்பர், 2018

பேரீச்சம்பழ துக்கடா

வணக்கம்.
பேரீச்சம்பழ துக்டா:
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம்--150கிராம்(கொட்டை நீக்கியது)
சர்க்கரை--150கிராம்.
மைதா--250கிராம்.
எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
மைதாமாவையும், சர்க்கரையையும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.இதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் ஒரு பேரீச்சம்பழத்தை வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.சுவையான பேரீச்சம்பழ துக்கடா தயார் .
                  நன்றி.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

கடலை மாவு பர்பி

வணக்கம்.
கடலை மாவு பர்பி
தேவையான பொருட்கள் :
கடலை மாவு --1  1/2டம்ளர் (ஒன்றை டம்ளர்)
பால் --1 1/2டம்ளர் (ஒன்றை டம்ளர்)
சர்க்கரை---3டம்ளர் (மூன்று டம்ளர்)
நெய்--4தேக்கரண்டி
செய்முறை:
கடலை மாவில் நெய் விட்டு உதிரியாக பிசைந்து வைக்கவும்.வாணலியில் பால் ஊற்றி அத்துடன் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.பால் கொதித்ததும் பிசைந்து வைத்துள்ள கடலை மாவை அதில் போட்டு அடிபிடிக்காமல் கிளரவும் .கலவை நன்றாக பொங்கி  நுரைத்து வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் பரப்பி விடவும்.கத்தியால் சிறிய வில்லைகளாக போடவும்.சுவையான கடலை மாவு பர்பி தயார் .
                                                                   நன்றி.

பாசிப்பருப்பு அல்வா

வணக்கம்.
பாசிப்பருப்பு அல்வா
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு --1/4கிலோ
சர்க்கரை--1/4கிலோ
நெய்--300மி.லி
ஏலக்காய்--5
முந்திரி பருப்பு --25கிராம்
பஜ்ஜி பவுடர் --சிறிதளவு
செய்முறை:
பாசிப்பருப்பை 1/2மணி நேரம் ஊற வைத்து அரைத்து ,வாணலியில் நெய் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு கலவையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளரவும்.கிளரி  வரும் போது சிறிதளவு பஜ்ஜி பவுடர் சேர்க்கவும்.அல்வா பதம் வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி  வறுத்த முந்திரி பருப்பு வைத்து அலங்கரிக்கவும்.சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
                                 நன்றி.

வியாழன், 11 அக்டோபர், 2018

மைதா ஸ்வீட் கேக்

வணக்கம்.
மைதா ஸ்வீட் கேக்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு --1/2கிலோ
சர்க்கரை--600கிராம்
டால்டா--400கிராம்
ஏலக்காய்--6
உப்பு சிறிதளவு
செய்முறை:
மைதா மாவை  சிறிதளவு உப்பு சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும். 1டம்ளர் அளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை பாகு காய்ச்சவும்.பாகு கம்பி பதத்தில் வருவதற்கு முன்பே மைதாமாவை போட்டு அதனுடன் டால்டாவையும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளக்கொண்டே வரவும்.எல்லாம் நன்றாக சுருண்டு வரும் போது ஏலக்காயை பொடி செய்து பாேடவும்.ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பி  விடவும்.கத்தியால் வில்லைகளாகப் போடவும்.மைதா ஸ்வீட் கேக் சாப்பிட சுவையாக இருக்கும்.
                                                  நன்றி

சோளக்கதிர் அல்வா

வணக்கம்.
சோளக்கதிர் அல்வா
தேவையான பொருட்கள்:
உதிர்த்த  சோளக்கதிர் மணிகள்--1டம்ளர்
சர்க்கரை--3/4 டம்ளர்
முந்திரி பருப்பு--10
நெய்--தேவயான அளவு
ஏலக்காய்-5
செய்முறை:
உதிர்த்த சோளக்கதிர் மணிகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, முந்திரி பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளரவும்.சிறிது கெட்டியான பிறகு ஏலக்காய், நெய் சேர்த்து இரக்கவும்.சுவையான சோளக்கதிர் அல்வா ரெடி.
               நன்றி.


உருளைக்கிழங்கு வடை

வணக்கம்.
உருளைக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு-4
பொரிகடலை மாவு -1/4கப்
அரிசி மாவு --1௧ப்
தக்காளி--4
எண்ணெய் தயாரிக்க தேவையான அளவு
பெருங்காயம் --சிறிதளவு
இஞ்சி -சிறிய துண்டு
பச்சை மிளகாய்-- 6
தேங்காய் துருவல் --1கப்
கறிவேப்பிலை ,கொத்தமல்லி --தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி,பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து துருவி வைத்துக்கொள்ளவும். தக்காளியை சுடு தண்ணீரில் விட்டு தோல் உரிக்கவும் ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழஙகு,தக்காளி,அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய்,இஞ்சி,தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கறிவேப்பிலை,கொத்து மல்லி தளை போட்டு,பெருங்காயம் சேர்த்து வடையாக  தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு வடை தயார்.

சனி, 6 அக்டோபர், 2018

கோதுமை பரோட்டா

வணக்கம்.
கோதுமை பரோட்டா.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -1/2கிலோ
எண்ணெய்--4ஸ்பூன்
புதினா -சிறிதளவு
மாவு பிசைய தேவையான அளவு தண்ணீர்
நெய் -தேவையான அளவு .
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவை நன்றாக சலித்து உப்பு, எண்ணெய்,தண்ணீர் சேர்த்து இளகலாக பிசைந்து வைத்து கொள்ளவும்.புதினாவை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பிசைந்து வைத்து உள்ள  கோதுமை மாவை சிறு உருண்டையாக வைத்து அதன் மேல் நறுக்கி வைத்து  உள்ள புதினாவை தூவி நான்கு மடிப்பாக மடித்து சிறிது கனமாக  தேய்க்கவும்.தவாவில் நெய் ஊற்றி சதுரமாக தேய்த்து வைத்து உள்ள கோதுமை கலவையை சுட்டு எடுக்கவும். சுவையான கோதுமை பரோட்டா ரெடி.
             நன்றி!