160x600_1 IFRAME SYNC

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

அவல் பர்பி.

வணக்கம்.
தேவையான பொருட்கள்:
அவல் --250 கிராம்.
தேங்காய் --1 பெரியது.
கடலை மாவு --1 டேபிள் ஸ்பூன்.
பால்--500 மில்லி லிட்டர்.
சர்க்கரை ---500 கிலோ.
நெய்-- 150 கிராம்.
கேசரி பவுடர் --கால் டீஸ்பூன்.
ஏலக்காய் பொடி --அரை டீஸ்பூன்.
செய்முறை:
 அவலை சுத்தம் செய்து வாணலியில்  ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு நிமிடம் வறுத்த பின் மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.கடலை  மாவை  வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும்.தேங்காயைத்துருவி,தண்ணீர் விடாமல் கரகரவென்று  அனைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காயவைத்து பாதியாக வற்றவிடவும் இத்துடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.சர்க்கரை கரைந்ததும் கேசரிப்பவுடரை பாலில்கரைத்துச் சேர்க்கவும்.பின் பொடி செய்த அவல்,கடலை மாவு,தேங்காய் மூன்றையும் சேர்த்து, சிறிது சிறிதாக நெய் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கிளரவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வரும் சமயம் ஏலப் பொடி சேர்த்து நெய் தடவிய தட்டில் பரப்பி ஆறிய பின் துண்டுகள் போடவும்.சுவையான அவல் பர்பி தயார்.
           
.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக